Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவ வீரரின் பயங்கர தாக்குதல்…. மூதாட்டி கொடூர கொலை…. தேனியில் பரபரப்பு….!!

உறவினர் என்றும் பாக்காமல் மூதாட்டியை சரமாரியாக வெட்டி கொலை செய்த ராணுவ வீரரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் வாழையாத்துப்பட்டியில் உள்ள ஒக்கலிகர் தெருவில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். பஞ்சாப்பில் இந்திய ராணுவ வீரராக பணிபுரிந்து வரும் இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜீவிதா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கண்ணையன் வீட்டிற்கு எதிரே உள்ள அவரது பெரியம்மா முத்தம்மாள்(69) செய்வினை வைத்ததால் தான் ஜீவிதா என்னை விட்டு பிரிந்து சென்றதாக கூறி அவர் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனையடுத்து 2 தினங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கண்ணையன் மீண்டும் முத்தம்மாளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கண்ணையன் அரிவாளை எடுத்து முத்தம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் முத்தமாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் கண்ணையன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த தேனி துணை சூப்பிரண்டு அதிகாரி பால்சுதிர் தலைமையில் பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் காவல்துறையினர் முத்தம்மாளின் உடலை பார்வையிட்டு, அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தப்பியோடிய கண்ணையனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |