Categories
உலக செய்திகள்

“ராணியாரின் மிகவும் நெருக்கமான பணியாளர்”… வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்… பிரித்தானிய ராஜ குடும்பத்தில் மற்றொரு துயர சம்பவம்…!!!!!

மறைந்த பிரித்தானிய ராணியாருக்கு மிகவும் நெருக்கமான பணியாளர்களில் ஒருவரும் ராணியாரின் முடிசூட்டு விழாவில் உதவியவருமான பெண்மணி மரணமடைந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர். மறைந்த ராணியாரின் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் லேடி மேரி ரஸ்ஸல் அவரது குடியிருப்பிலேயே மரணம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. 88 வயதான இவர் ஏர்ல் ஹாடிங்டன் என்பவரின் மகள் எனவும் ராணியார் இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவில் அவருக்கு உதவிய ஆறு பெண்களில் ஒருவர் எனவும் கூறுகின்றார்கள். மேலும் முடிசூட்டு விழாவில் ராணியாரின் 21 அடி நீளமான உடையை சுமந்து செல்லும் பணியில் இந்த ஆறு பெண்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

வெஸ்ட் மின்ஸ்டர் குருமடாலயம் வழியாக கேன்டர்பரி பேராயர் பின்னர் ஜெப்ரி ஃபிஷரை நோக்கி இந்த பயணம் நீண்டு இருக்கின்றது ஆனால் ராணியாரின் அந்த சிறப்புடையை சுமந்து செல்ல கிடைத்த வாய்ப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என லேடி மேரி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ஆறு பேர்களில் தற்போது இரண்டாவது நபராக தனது 88 வது வயதில் லேடி மேரி மரணம் அடைந்திருக்கின்றார். 2020ல் லேடி மொய்ரா காம்பெல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் தற்போது உயிருடன் இருப்பவர்கள் டோவேஜர் பரோனஸ், லேடி ஜேன் லேசி, பரோனஸ் வில்லோபி, டி எரெஸ்பி மற்றும் ரோஸ்மேரி முயர் ஆகிய நான்கு பேர் மட்டுமே. லேடி மேரி மரணம் அடைந்திருக்கின்ற தகவல் பிரித்தானிய ராஜ குடும்பத்து உறுப்பினர்களை கவலை அடைய செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |