கடற்கரையில் நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சியின் போது ராட்சத அலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் எனும் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் 20 க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட திடீர் ராட்சத அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்துச் சென்றது.
இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 12 பேர் தானாக நீந்தி கரை சேர்ந்தனர். மேலும் மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் பலமணிநேரத்திற்கு பின் அவர்கள் அனைவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.