Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்தி…. பெங்களூர் அணி மிரட்டல் வெற்றி….!!!!

ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 37 ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஹெட்மயர் இறங்கி, பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பட்லர் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்த அணியின் சபாஸ் அகமது 45 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 44 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Categories

Tech |