Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது…? ஆலோசனைக் கூட்டம்… வெளியான தகவல்…!!!!!

ராஜஸ்தானுக்கு புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல் பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்பு மனுக்களை வருகின்ற 30ஆம் தேதி வரை தாக்கல் செய்து கொள்ளலாம். தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும்.

மேலும் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி என்னபட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட போவதில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் ராஜஸ்தான் முதல் மந்திரியான அசோக் கெலாட், கேரளா எம்பி சசிதரூர் போன்றோர் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி விதிகளின்படி ஒரு நபர் ஒரு பதவியில் தான் இருக்க வேண்டும் என்பதனால் தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் ராஜஸ்தான் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்படும்.

இந்த சூழலில் ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் இன்று முதல் மந்திரி அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ள அசோக் கெலாட் ஒருவேளை வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தானுக்கு புதிய முதல் மந்திரியாக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தானின் புதிய மந்திரியாக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று நடைபெற இருக்கின்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களாக அஜய் மாகன், மல்லிகார்ஜுன், கார்கே போன்றோர் பங்கேற்க இருக்கின்றனர்.

Categories

Tech |