Categories
தேசிய செய்திகள்

ராகுல் நடைபயணம்: “குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர்”…. இது உண்மையில்லை…. -ஜெய்ராம் ரமேஷ்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின்போது குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதன் வாயிலாக காங்கிரஸ் சட்டத்தை மீறுகிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்தை குழந்தைகள் உரிமை அமைப்பு கேட்டுக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெய்ராம் ரமேஷ், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ள புகாரை “முழு பொய்” என வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய செய்தித்தொடர்பாளர் என்ன செய்யவேண்டும் என்பதை அவருக்கு அறிவுறுத்தும் சில நபர்களின் பேச்சை அவர் பின்பற்றுகிறார். இந்த போலிப் புகார் குறித்து தேர்தல் ஆணையத்திடம் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்து இருக்கிறோம். ஓவியப் போட்டிக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் பரிசு வழங்கும் விழாவில் ராகுல்காந்தி கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும்படி குழந்தைகளிடம் ராகுல்காந்தி கேட்கவில்லை. கடந்த 2007ல் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் துவங்கப்பட்டதில் இருந்து, ஆணையத்திற்கு பாஜக-ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல்முறை” என்று கூறினார்.

Categories

Tech |