ரஷ்ய ரானுவதளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனுக்கு அருகில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் இரண்டு பேர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்து இருக்கின்றனர் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சோவியத் தன்னார்வல வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் உக்ரைன் போரில் பங்கேற்க மூன்று லட்சம் ரஷ்யர்களை அணி திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கின்ற நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.