உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. உக்ரைனில் இந்த நான்கு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதன் வெளியிடுவார். மேலும் ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியிருக்கின்றார்கள். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்திருப்பதை நில அபகரிப்பு நடவடிக்கை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.
மேலும் அமெரிக்க உள்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் பேசும்போது, சர்வதேச சட்டங்களின்படி ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது உக்ரைனில் ரஷ்ய படைகள் வசம் இருக்கின்ற லுஹான்ஸ்க், டொனாக்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா போன்ற நான்கு பிராந்தியங்களை அதிகாரப்பூர்வமாக தன்னுடன் இணைத்துக் கொள்வதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என கூறியுள்ளார். இந்த நிலையில் மறுமுனையில் ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியதற்கு இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையின் ஜார்ஜிய மண்டபத்தில் 15.00 மணிக்கு ரஷ்யாவில் புதிய பிரதேசங்களை இணைத்தல் தொடர்பான கையெழுத்திடும் விழா நடைபெறும் எனக் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என உலக நாடுகள் கூறி வருகிறது.