பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரும், நடிகை மஹாலக்ஷ்மியும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், சிலர் தவறாக பேசினர். இதன் காரணமாக ரவீந்தர் மீது பல்வேறு சர்ச்சைகள் சமூகவலைத்தளத்தில் எழுந்தது. அந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் உரிய பதிலடியை ரவீந்தர் கொடுத்தார்.
இந்த நிலையில் திருமணம் முடிந்து 2 மாதங்கள் முடிவடையாத சமயத்தில் ரவீந்தர், மஹாலக்ஷ்மி இரண்டு பேரும் பிக்பாஸ் சீசன் 6ல் ஜோடியாக பங்கேற்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஏறக்குறைய உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தற்போதுதான் அவர்களுக்கு திருமணம் நடந்தது. அதற்குள் அவர்களை பிரித்துவைக்க போகிறீர்களா என தவறாக பேசி வருகின்றனர். இது தற்போது சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது..