Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே …. இந்த ரயில்கள் எல்லாம் நாளை இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.  அதில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மறு மார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அதே  ரயில்  நாளை  நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் செங்கோட்டை-மதுரை இடையே காலை 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விருதுநகரில் இருந்து மாலை  6.10 மணிக்கு இயக்கப்படும். நாகர்கோவில்-கோவை இடையே காலை 7. 35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில்  இருந்து மதியம் 1 .25 மணிக்கு புறப்பட்டு செல்லும், மறு மார்க்கமாக கோவை-நாகர்கோவில் இடையே காலை 8 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளனர்.

Categories

Tech |