Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. டிக்கெட் பெற புதிய வசதி…..!!!!!

சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட்டுகளை எடுப்பதில் பயணிகளுக்கு ஏற்படும் கால தாமதத்தை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தை ஒவ்வொரு டிக்கெட் வழங்கும் கவுண்டர் அறை அருகே வைத்துள்ளது. இதை பயன்படுத்தி பயணிகள் தாங்களாகவே எளிதில் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட்டை விநியோகம் செய்யும் எந்திரத்தில் “க்யூ ஆர்” கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையையும் தெற்கு ரெயில்வேயானது அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி பயணிகள் “க்யூ ஆர்” கோடை ஸ்கேன் செய்து google pay, phone pay ஆகிய செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த ”க்யூ ஆர்” கோடு வசதி மூலமாக சீசன் டிக்கெட்டை புதுப்பித்தால் பயணிகளுக்கு 0.5 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

Categories

Tech |