Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!!!

ஒவ்வொரு மாதமும் 4 – 5 வந்தே பாரத் ரயில்கள்  இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத் ரயில் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹை ஸ்பீட் சுய உந்துதல் மூலமாக இயக்கப்படும் ரயில் சேவை ஆகும். இது மிகவும் வேகமாகவும் பணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத்  ரயில்கள்  திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2019 ஆம் வருடத்தில் வந்தே  பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பின் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூபாய் 100 கோடியில் உருவாக்கப்பட்டிருந்தது.

இதில் தற்போது இயக்கப்பட்டு வரும் இந்த வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகவும், 14 சேர் கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டியாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தற்போது டெல்லி முதல் வாரணாசி வரை டெல்லி முதல் காத்ரா வரை என 2வந்தே பாரத் ரயில்கள்  இயக்கப்பட்டு வருகின்ற  நிலையில் அடுத்த மூன்று வருடங்களில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் 4 – 5 வந்தே பாரத்  ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டு இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்  கூறியுள்ளார்.

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 67 ஆவது தேசிய ரயில்வே விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் அஷ்வினி விருதுகளை வழங்கி உள்ளார். அப்போது அவர் பேசியபோது உலகத்தரத்திற்கு இணையாக ரயில்வேயை  புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வருகிற செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 4-5 பாரத் ரயில்கள்  தொடங்கப்பட்டு இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதிவேக புல்லட் ரயில்களுக்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |