ரயில் பயணிகளுக்கு மத்திய ரயில்வே சார்பாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய ரயில்வே துறை சார்பாக மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மலைவாசஸ்தலமான மாதேரன் பகுதியில் மினி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோடைகால விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிவதால் கூடுதல் சேவை இயக்கப்பட இருக்கின்றது. இது தொடர்பாக மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுத்தார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாதேரன்- அமன்லாட்ஜ் இடையே இயக்கப்பட்டு வரும் மினி ரயில்கள் தற்போது 16 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கூடுதல் வசதிக்காக 4 சேவைகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு வருகின்ற 31 ஆம் தேதி வரை இயக்கப்பட இருக்கின்றது. இதனால் மொத்தம் தினசரி 20 சேவைகள் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே வார இறுதி தினங்களில் 20 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நேரல் – மாதேரன் இடையேயான வழித்தடம் சேதம் அடைந்திருப்பதால் நீண்ட காலமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் மாதேரி அமன்லாட்ஜ் தற்போது ரயில்சேவை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.