தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்த நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் ரயில்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட்கள் பதிவு ஒரு மாதங்களில் மீண்டும் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறியது, கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டிக்கெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு இல்லாமல் டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கப்படும். அதனைப்போலவே பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை ரூ.50 இருந்து ரூ.10 க்கு மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.