நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். அதனால் பலரும் வயிறு பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளுக்காக ஐ ஆர் சி டி சி பல வசதிகளை செய்து வருகிறது. டிக்கெட் முன்பதிவு முதல் உணவு வரை அனைத்திற்கும் டிஜிட்டல் முறையில் தீர்வு கிடைக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் முழுவதும் சைவ உணவு சாப்பிடும் ரயில்வே பயணிகளின் தேவையை அறிந்து தற்போது ஐ ஆர் சி டி சி, ISKCON உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து பயணிகள் சைவ உணவை ஐஆர்சிடிசி கேட்டரிங் இணையதளம் அல்லது புட் ஆன் ட்ராக் செயலியின் மூலம் PNRரயில் கிளம்ப இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களின் உணவு உங்கள் இருக்கை தேடி வந்து சேரும். முதல் கட்டமாக டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.