இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக உணவுகளும் வழங்கப்படும். நிலையில் ரயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலா பிரிவான ஐ ஆர் சி டி சி க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும்,நீரிழிவு நோயாளிகள் மற்றும் கைக்குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உணவு வகைகளில் பருவ கால சுவையான உணவுகள் மற்றும் பண்டிகை கால உணவுகள் என விருப்பங்களுக்கு ஏற்ப பல வகையான உணவுப் பொருள்களும் உள்ளடங்கும். பயணிகள் அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.