Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. கட்டாயம் என்னனு படிச்சி தெரிஞ்சிக்கோங்க…!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ரயில் சேவை 2 வருடமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ஒரு புதிய விதியை உருவாக்கியுள்ளது. இந்த விதிகளின் கீழ் உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி உடன் இணைத்திருந்தால், உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு நபர் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசியுடன் இணைக்காமல் இருந்தால் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆனால், ஐஆர்சிடிசி ஐடியை ஆதார் அட்டையுடன் இணைத்திருந்தால், ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஐஆர்சிடிசி இந்த விதியில் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது நீங்கள் ஒரு ஐஆர்சிடிசி ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசிஉடன் இணைக்காவிட்டாலும், ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |