Categories
தேசிய செய்திகள்

“ரயில் இல்லை, ஓட்டும் இல்லை”… எதற்காக தெரியுமா?…. 18 கிராம மக்களின் ஆதங்கம்….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபைதேர்தல் நெருங்கி வருகிறது. இதற்குரிய தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் 1, 5 போன்ற தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கின்றனர். மேலும் கிராமமக்கள் சார்பாக பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் “ரயில் இல்லை, ஓட்டும் இல்லை” என எழுதப்பட்டு உள்ளது. இங்குள்ள அஞ்செலி ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் வெகுநாட்களாக கோரிக்கை விடுத்தும் அவை ஏற்கப்படாததால் அவர்கள் கோபமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

அத்துடன் பாஜக மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வருவதற்கும், கிராமத்தில் பிரசாரம் செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் ரெயில் நிற்காததால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் படிப்பில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது என கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு ரயில் நிற்காவிட்டால் வாக்குப்பதிவு நாளில் யாரும் வாக்களிக்க செல்லமாட்டார்கள் என்று கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் அன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி வருகிறதோ அப்படியே, ஒரு ஓட்டுகூட பதிவுசெய்யாமல் திருப்பியனுப்பப்படும் என்று கூறுகின்றனர்.

Categories

Tech |