Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் இவர்களுக்கு மீண்டும் கட்டண சலுகை…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பதிலளித்தார். பயணிகளுக்கு பல்வேறு வகையில் வழங்கப்படும் சலுகைகளால் ரயில்வேவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே வருவாய் பாதிக்கப்பட்டு இருப்பதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், ரயில்களில் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதற்கான கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், கட்டண சலுகை மூலம் சாமானிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள் எனவும் ரயில்வே அமைச்சகத்திற்கு, ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |