Categories
மாநில செய்திகள்

ரயிலில் சடலத்துடன் வந்த பயணிகள்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்……!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள செல்களில் இருந்து கடந்த 8ஆம் தேதி கிளம்பி ரயில் ஒன்று நேற்று திருப்பூர் வந்தடைந்தது. ரயிலில் இஸ்திரி பெட்டியில் கம்பளி போர்த்தி ஒருவரை இறக்கிய இரண்டு பேர் அவரை தூக்கிக் கொண்டு சென்றிருந்தனர். இதனை கவனித்த அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையில் இறந்தவர்  அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் பகுதியை சேர்ந்த அரபிந்த் ராய் (வயது 30)  என்பது தெரியவந்துள்ளது.

இவர் பெங்களூரில் செக்யூரிட்டி ஆக பணியாற்றி வந்தார் என்பது தெரிகிறது. அசாமில் இருந்து திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இருவரும் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், நேற்று அதிகாலை 7 மணிக்கு ஜோலார்பேட்டை  வந்திருக்கிறது. ரயில் நிலையத்தில் அரபிந்த்  இறங்கவில்லை. அவருடன் பயணித்தவர்கள் அவரை எழுப்ப முயற்சித்தனர் ஆனால் பயனில்லை. இதனையடுத்து அவர் இறந்தது உறுதியாக தெரிந்தது. அவரின் செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் திருப்பூரில் இறங்கி உடலை வைக்க சொல்ல இறந்த உடலுடன் அனைவரும் 4 மணி நேரம் பயணித்து திருப்பூர் வந்துள்ளனர். இதனையடுத்து அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |