Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி….. வீட்டில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி பொதிகை நகரில் சாவித்திரி(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாவித்திரியின் கணவர் இறந்துவிட்டார். 3 மகன்களும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர் bஇதனால் சாவித்திரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான மூன்று வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் பாட்டியை பார்ப்பதற்காக சாவித்திரியின் பேரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் தனது பாட்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெகன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது வீட்டில் இருந்த பணமும், மூதாட்டி அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருந்தது. மர்ம நபர்கள் யாரோ மூதாட்டியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டி வீட்டிற்கு வந்து சென்றவர்களின் விவரம்? அவரை எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |