ரஞ்சிக் கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்பு மறைந்த தனது மகளின் சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு விஷ்ணு சோலங்கி ஆட்டமிழக்காமல் 103(161) ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.
ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆவது சுற்றில் டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆகையினால் சண்டிகார் பேட்டிங் செய்ய யாருமே பெரியளவு ஸ்கோரை அடிக்காமல் இருந்துள்ளார்கள். அந்த அணி முதல் இன்னிங்சில் 168/10 ரன்களை மட்டுமே குவித்துள்ளது. அதன் பின்பு களமிறங்கிய பரோடா அணி 398/7 ரன்களை குவித்துள்ளது. இதிலும் விஷ்ணு சோலங்கி அபாரமாக விளையாடி 103(161) ரன்களை குவித்துள்ளார்.
இதற்கிடையே சோலங்கியின் மகள் அண்மையில் காலமாகியுள்ளார். இந்நிலையில் தனது மகளின் மறைவை கூட மறந்து விட்டு அந்த சோகத்தை எல்லாம் தனக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு எந்தவித அழுத்தமும் இன்றி போட்டியில் சதமடித்துள்ள விஷ்ணுவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும், ஆறுதல்களையும் கூறி வருகிறார்கள்.