Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்”…. படத்திற்கு நடந்த ஒரு விஷயம்….!!!!

தனுஷால் ரஜினி நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ஒரு விஷயம் நடந்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த  இந்த படம் சென்ற ஜூலை 18 திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. தனுஷின் படம் பல மாதங்கள் கழித்து திரையில் வெளியானதால் ரசிகர்கள் இந்த படத்தின் முதல் காட்சியை காண ஆவலாக இருந்தனர். அதன்படி இந்த படத்தின் முதல் காட்சி ஆரம்ப நிலையில் திரையரங்குகளை  தனுஷ் ரசிகர்கள் திருவிழாவாக மாற்றினார்கள். இந்நிலையில் இப்படம் வெளியான நாள் முதலே அனைத்து விதமான ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் தனுஷை வெற்றி பாதைக்கு திருப்பி உள்ளது.

இந்த நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கின்றது. திருச்சிற்றம்பலத்தை போல ஜெயிலர் திரைப்படம் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக சன் பிக்சர்ஸிடம் ரசிகர்கள் கூறியுள்ளனர். நெல்சன் பீல் ஃபுல் படம் எல்லாம் எடுக்க மாட்டார். பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தால் ரஜினியை வைத்து ஏதோ பெரிதாக சம்பவம் செய்வதுபோல மட்டும் தெரிகின்றது. எதுவாக இருந்தாலும் திருச்சிற்றம்பலம் படத்தைப் போல ஜெயிலரும் தியேட்டரில் வசூல் வேட்டை நடத்த வேண்டும். இது மட்டும் நடக்கும் படி பார்த்துக்கோங்க சன் பிக்சர்ஸ் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |