தமிழகத்தில் ரஜினி அரசியலுக்கு வராதது நல்லது என்று பிரபல நடிகர் மோகன்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான்செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வராதது நல்லது என்ற பிரபல நடிகர் மோகன்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில் நான் ரஜினியிடம் சொன்னேன். நீங்கள் ஒரு நல்ல மனிதர். ஒரு சிறிய பூச்சிகள் கூட தீங்கு செய்ய தெரியாதவர். என் பார்வையில், மிகப்பெரிய நபர்களில் ஒருவர். உங்களைப் போன்ற ஒரு நபர் அரசியலுக்கு தகுதியற்றவர். ஏனென்றால் நாம் நேர்மையாக பேசுகிறோம். யாரையும் ஏமாற்ற மாட்டோம் என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.