Categories
சினிமா

ரஜினியின் 169-வது படப்பிடிப்பு தொடங்க போகுது…. லீக்கான தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

அண்ணாத்த திரைப்படத்துக்கு பின் நெல்சன்திலீப்குமார் இயக்கக்கூடிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக அறிவித்தனர். எனினும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. இது ரஜினிக்கு 169வது படம் ஆகும். இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயும், வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனும், மகள் கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள்மோகனும் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இருந்தாலும் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்குவற்கு முன் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள முடிவு செய்து உள்ளதாகவும், அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியது. அத்துடன் ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் முன்னதாக ஜூலை மாதமே படப்பிடிப்பை துவங்க ஏற்பாடுகள் நடப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைபடத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவருகிறார்கள்.

Categories

Tech |