இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடி வருகிறது.
இலங்கையில் தற்போது வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடி வருகிறது. இதையடுத்து 12 மணி நேர மின்வெட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே ஒருவாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டமானது நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக பதவியேற்றுக் கொண்ட மந்திரிகள் முன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உரையாற்றியபோது , இலங்கையில் ரசயான உரங்களை பயன்படுத்த தடை விதித்தது மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே நிதி உதவி கோராதது ஆகியவை தவறுதான் என்று கூறி தம் வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்தியில் இலங்கையில் இயற்கை விவாசயத்தை ஊக்குவிக்கும் வகையில், செயற்கை ரசாயன உரங்கள் இறக்குமதிக்கு தடை விதித்தும் உத்தரவிட்டு இருந்தார்.