Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யாரும் வீட்டை விட்டு வராதீங்க…. நகராட்சி முக்கிய அறிவிப்பு…..!!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று நகராட்சி அறிவுறுத்தியுள்ளது, இதற்கு முன்னதாக நகர்ப்புறத்தில் நுழைந்த சிறுத்தை இதுவரையிலும் 6 நபர்களை தாக்கியுள்ளது.

இதன் காரணமாக காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தை வந்துவிடுமோ என்று பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |