Categories
தேசிய செய்திகள்

“யாரும் பயப்பட வேண்டாம்”… ஹோட்டல்களில் சிகிச்சை மையம் அமைக்கப்படும்… ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு…!!

கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதிகள் இல்லாத நிலையில் ஹோட்டல்களில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் 2ஆம் அலை அதிகரித்துவரும் இந்த நிலையில் நாட்டில் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மருத்துவமனைகளில் படுக்கைவசதி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாதபோது சுற்றுலா ஹோட்டல்களை கொரோனா சிகிச்சை மையங்களாக அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கை மூலம் வைரஸ் தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வர முடியும் என சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

Categories

Tech |