Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாருன்னு தெரியலையே…. ஆற்றில் மிதந்த பெண் பிணம்…. தேனியில் பரபரப்பு….!!

முல்லை பெரியாற்றில் அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முல்லைப்பெரியாறு கரையோரத்தில் பெண் ஒருவரின் பிணம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக வீரபாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |