Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்…? உடற்பயிற்சியாளருக்கு சரமாரியான வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

உடற்பயிற்சியாளரை 3 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் அருண் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருண் பாபு உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்த போது 3 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அருண் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனை அடுத்து படுகாயமடைந்த அருண் பாபுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், முகமது ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் மற்றொரு வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |