Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யாருகிட்ட பேசிட்டு இருக்க…? மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தந்தை கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கட்டிட மேஸ்திரியான கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களது 2-வது மகளான மேகனா என்பவர் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகனா செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் கந்தன் தனது மகளை கண்டித்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மேகனா கத்தியால் தனது இரண்டு கை மணிக்கட்டு பகுதியிலும் அறுத்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மேகனாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு இருந்தனர். அங்கு மேகனாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |