Categories
தேசிய செய்திகள்

“யானை தந்தத்தில் செய்யப்பட்ட சிலை” மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 3 பேர்….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 2 சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலையை விற்பனை செய்ய முயற்சிக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கிருஷ்ணன், சூர்யா கோஸ், ஜோன்ஸ் ஆகியோர் சிலைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் சிலைகளை வாங்கும் நபர்கள் போன்று 3 பேரிடமும் நடித்தனர்.

இதை உண்மை என நம்பிய 3 பேரும் சிலைகளை விற்பனை செய்வதற்காக வனத்துறையினரிடம் சிலைகளைக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். அதன் பிறகு வனத்துறையினர் சிலைகளை பறிமுதல் செய்ததோடு 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஜோன்ஸ், சூர்யா கோஸ், கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |