Categories
மாநில செய்திகள்

மௌனம் காக்கும் முதல்வர்…. தமிழக அரசு ஊழியர்கள் முடிவு என்ன?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பழைய பென்ஷன் திட்டம் அமலாகும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மிக முக்கியமான ஒன்று பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள cps எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் இதில் இழப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தேர்தலின் போது திமுக பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இதுநாள் வரை இந்தத் திட்டத்தை அமல் படுத்தவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது அதற்கு அதிக செலவாகும் என்பதாலும், இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்றும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கட்டாயம் செயல்படுவதாக கூறி ஆட்சிக்கு வந்து விட்டு தற்போது நிதி பற்றாக்குறை என்று காரணம் காட்டி மறுப்பது சரியில்லை என்று cps ஒழிப்பு அமைப்பினர் கூறுகின்றனர். பொதுமக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று cps ஒழிப்பு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் ஏன் இன்னும் மெளனம் சாதிக்கிறார் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் cps ஒழிப்பு இயக்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் பெருந்திறல் முறையீடு நேற்று நடைபெற்றது. அதில் கோரிக்கை மனு PAG அவர்களிடம் அளிக்கப்பட்டது. இதில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம், வணிகத்துறை அலுவலர் சங்கம், பல்நோக்கு சுகாதார பணியாளர் நல சங்கம், பாரதியார் பல்கலைகழகம் ஊழியர்கள் சங்கம், பொதுத்துறை போக்குவரத்து பணிமனை ஊழியர் சங்கம் ஆகிய துறை வாரி சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் பெருந்திறல் முறையீடு மனு கரூர் மாவட்ட நிர்வாகிகள் மூலம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனைப் போல மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை கடிதத்தை அளித்துவருகின்றனர்.

Categories

Tech |