கோவாவின் டபோலிம் விமானநிலையமானது 1 ஆண்டில் 85 லட்சம் பயணிகளை கையாளும் திறனுடையது ஆகும். இந்த நிலையில் கோவாவின் மோபாவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா சர்வதேச விமான நிலையத்தை PM மோடி இன்று துவங்கி வைத்தார்.
ரூபாய். 2 870 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த விமான நிலையத்தில் இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் போன்றவை புதிதாக அமைகிறது. முதற் கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன்கொண்ட இந்த விமான நிலையமானது, முழு திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும் என்று கூறப்படுகிறது.