Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணக்கரையில் கூலி தொழிலாளியான சிவ சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ராஜதுரை என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலி நோக்கி சென்றுள்ளார். இவர்கள் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் இருக்கும் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவசுப்ரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

அதன்பின் காயமடைந்த ராஜதுரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவசுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |