மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள விரகனூர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தெப்பத் திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகானந்தத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.