Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய லாரி…. தூக்கி வீசப்பட்ட காவலாளி…. நேர்ந்த சோகம்….!!

காஞ்சிபுரத்தில் லாரி மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான ஓரகடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அங்கம்பாக்கத்திலிருந்து ஓரகடத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது நாகராஜன் அவளூர் வாலாஜாபாத் மேம்பாலத்திற்கு அருகே நெருங்கும்போது திடீரென்று லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் பலத்த காயமுற்றதால் அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்கு தொடர்பு கொண்டுள்ளனர் . இதனை தொடர்ந்து மருத்துவமனையில் நாகராஜனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார் . இச்சம்பவத்தினை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |