மின்னல் தாக்கி ஆசிரியர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிசங்கர்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராஜ் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால் ரவிசங்கர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்துவிட்டார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று ரவிசங்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.