Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சென்ற உறவினர்கள்…. திடீரென நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை ….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லுவதற்காக  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சரவணகண்ணன்  தனது உறவினரான  காளிமுத்து என்பவருடன் சேர்ந்து கோவில்பட்டி-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாலிபர் ஒருவர் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி கீழே விழுந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.  மேலும் சரவணகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |