Categories
தேசிய செய்திகள்

“மோடி ஆட்சியில் விஐபி கலாச்சாரத்திற்கு இடமில்லை”… இணையத்தில் குவிந்து வரும் பாராட்டு… வைரலாகும் வீடியோ…!!!!

பிரதமர் மோடி சாலை விதிகளை கடைபிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்வதாக இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். இந்த நிலையில் அகமதாபாத்தில் நேற்று முப்பத்தி ஆறாவது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6000 கோடி மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேலும் இரண்டாவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து காந்தி நகரில் இருந்து அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் மோடி பயணம் செய்து மகிழ்ந்துள்ளார்.

முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்திநகரில் இருந்து அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர் அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வருவதைக் கண்டு அவர் உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளும் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் சென்ற பின் பிரதமர் மோடி வாகனங்கள் சென்றுள்ளது. இது பற்றிய வீடியோ குஜராத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ருத்விஜ் பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் மோடி ஆட்சியில் விஐபி கலாச்சாரத்திற்கு இடமில்லை எனக் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் பிரதமர் மோடி சாலை விதிகளை கடைபிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்வதாக இணையதளத்தில் பாராட்டி வருகின்றார்கள்.

 

Categories

Tech |