Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியின் அர்ப்பணிப்பு… மக்களை பாதுகாத்தது…. உலகிற்கே செம வழிகாட்டல்…!!

அது மட்டுமல்ல இங்கிருந்து 150 நாட்களுக்கும் மேலாக 13 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை நாம் பல நாடுகளுக்கு அனுப்பி வைத்து, நாம் மட்டுமல்ல உலகத்தில் இருக்கக்கூடிய மற்ற சிறிய நாடுகளிலும் கூட நம்முடைய இந்தியாவினுடைய பங்கு இருக்க வேண்டும், அந்த நாட்டு மக்கள் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாம் அனுப்பியிருக்கிறோம். கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகள் பல தடுப்பூசிகளை பதுக்கி அவர்களுக்கு தேவை இல்லை என்னும் பொழுது மற்ற சிறிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அங்கே அந்த தடுப்பூசிகளை அவர்களால் உபயோகிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இந்தியா அனுப்புகின்ற தடுப்பூசிகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தி அந்தந்த நாட்டு மக்களுடைய உயிர் பாதுகாக்கப்படுகிறது என்பது ஒரு ஆறுதலான விஷயமாக இருக்கிறது. இந்தியா உலகத்திற்கு வழிகாட்டியாய் ஆபத்பாந்தவனாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இதற்கும் காரணம் நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் என பெருமிதம் கொண்டார்.

Categories

Tech |