டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூபாய்.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அண்மையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு இணைதிருந்தது. சுகேஷிடமிருந்து ஜாக்குலின் ரூபாய்.7.12 கோடியும், அமெரிக்காவிலுள்ள அவரது சகோதரி ரூபாய்.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூபாய்.15 லட்சத்தையும் பெற்று இருக்கின்றனர் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில் ஜாக்குலின் பெர்னான்டசுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப் பிரிவு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, செப்டம்பர் 12ஆம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. எனினும் 2 சம்மனுக்கும் ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜராகவில்லை. முன்னதாக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் ஆஜராக முடியாது என ஜாக்குலின் காவல்த்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணையை தள்ளிவைத்து, வேறு தேதியில் ஆஜராக மீண்டுமாக புதிய சம்மன் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தனர். அதன்பின் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜரானார். இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னான்டசுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.