காரச்சேவு செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு -2 கிலோ
டால்டா -200 கிராம்
நல்லெண்ணெய் – 500 கிராம்
மிளகு பொடி -சிறிதளவு
உப்பு -சிறிதளவு
அரிசி மாவு – 100 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – 10 கிராம்
பெருங்காயப்பொடி – சிறிதளவு
வெள்ளைப் பூண்டு பொடி – சிறிதளவு தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனுடன் உப்பு, தேவைக்கு ஏற்ப தண்ணீரை சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் காரச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிதளவு கெட்டியாக பிசைந்த மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து அதை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
அதனை தொடர்ந்து எண்ணெயில் பொரித்த மாவை, மற்றொரு கரண்டியால் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும், அதை எடுத்து எண்ணெய் நன்கு வடிகட்டிய பின் உதிரியாக்கி வைத்தால் கார சேவு தயார்.