மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் விவசாயியான அன்பு செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 1 மகள், மகன் ஆகியோர் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான வயல் புளியங்குடியில் இருக்கிறது. இவருடைய வயலில் கலாராணி என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு விஷால் மற்றும் சந்தன பாண்டி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலை முடிந்ததும் கலாராணியும், அன்பு செல்வமும் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த கார் அன்புச்செல்வனின் மொபட்டின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்புச் செல்வமும், கலராணியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் காரை ஓட்டி வந்த சாதிக் என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கலாராணி மற்றும் அன்பு செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.