Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. போலீஸ் விசாரணை….!!!

மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மானாநல்லூர் கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென  மகேந்திரனின் மொபட் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தது விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |