Categories
சினிமா

மொத்த தமிழ் திரையுலக்கத்தையும் இந்த படத்தில் பார்க்கலாம்?…. -நடிகர் கார்த்திக் தகவல்…..!!!!

மணிரத்னம் இயக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அவர் பேசியதாவது, பல வருடங்கள் தமிழ்மக்கள், தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ஒரு தருணம். பொன்னியின் செல்வன் திரைப்படம் வரப்போகிறது. இதில் நானும் ஒர் அங்கமாக இருப்பது பெருமையாக இருக்கிறது.

மற்ற திரைப்படங்களில் பணிபுரியும்போது நம் சிந்தனைகள் வெளியே சென்று வரும். ஆனால் இதில் பணியாற்றும்போது எங்கிருந்தாலும் சிந்தனை அந்த கதாப்பாத்திரத்திலேயே இருக்கும். இப்படத்தில் நடித்த அனைவருக்கும் இதே உணர்வுதான் இருந்தது. தமிழ் திரையுலகில் இருக்கக்கூடிய அனைத்து பெரிய நடிகர்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள். மொத்த தமிழ் திரை உலக்கத்தையும் இந்த படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் அன்பு எப்போதும் தேவை. இப்படத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களும் மிக முக்கியமானவை ஆகும். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அதில் பாதி கதாப்பாத்திரங்கள் உண்மையாக வாழ்ந்தவை, பாதி கதாப்பாத்திரம் கற்பனையாக வடிவமைக்கப்பட்டது. வந்தியத் தேவன் அனைத்து கதாப்பாத்திரத்தையும் சந்திக்கக் கூடியவை. உடல் மொழி பேசுகிற மொழி ஒவ்வொருவரிடமும் மாறும் என்று கூறினார். இதற்கு முன்பாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய கார்த்தி ஆயிரத்தில் ஒருவனில் சோழ தூதுவனாக நடித்து இருந்தேன். முதலில் நீங்கள் கதையை புரிந்துக்கொண்டு வாங்க என சிரித்துக் கொண்டே பதிலளித்தார். அத்துடன் அந்த திரைப்படத்திற்கும் இதற்கும் எந்த ஒப்பிடுதலும் இல்லை. பொன்னியின் செல்வன் படத்தில் அந்த காலக் கட்டத்தில் வாழ வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |