தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூல் செய்யப்படாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இன்று சட்டப்பேரவையில் 2021-2022 ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார் இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோவிலில் திருமணம் நடத்த கட்டணம் கிடையாது. இலவசமாக நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.