Categories
தேசிய செய்திகள்

மைக்ரோசாஃப்டில் உள்ள பிழையை… சுட்டிக்காட்டிய பெண்ணிற்கு ரூ.22 லட்சம்… நிறுவனம் கொடுத்த அன்பளிப்பு…!!!

மைக்ரோசாப்டில் இருக்கும் பிழையை கண்டுபிடித்து அறிவிப்பதற்காக இளம் பெண்ணிற்கு 22 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த அதிதீ சிங் என்ற 20 வயதான இளம்பெண் மேப் மை இந்தியா நிறுவனத்தின் இணை பிழையை கண்டறிந்தால் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணியில் சேர்ந்து கொண்டது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முகநூல் இருக்கும் பிழையை கண்டறிந்து தெரிவித்துள்ளார். அதற்கு முகநூல் நிறுவனம் இவருக்கு 5.5 பரிசுத் தொகையை வழங்கியது.

இப்போது மீண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிழையை கண்டறிந்து, நிறுவனத்தில் இருக்கும் ஆர்.இ.சி என்ற தொலை குறியீடு பிழையை கண்டுபிடித்து அதனை அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதனால் இந்த இளம் பெண்ணை பாராட்டும் நோக்கில் இவருக்கு 30000 டாலர் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில், 22 லட்சம் ஆகும். இந்த இளம் வயதிலேயே மிகவும் திறமையுடன் செயல்பட்ட இளம்பெண் அதீதியின் செயலுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாராட்டுகளை தெரிவித்து உள்ளது.

Categories

Tech |