Categories
தேசிய செய்திகள்

மே 10 – 24ம் தேதி வரை முழு ஊரடங்கு…. அரசு திடீர் உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பரவலை தடுப்பதற்காக பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் கர்நாடகாவில் மே -10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அறிவிப்பதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். அனைத்து ஹோட்டல்கள், மதுக்கடைகள், பார்கள் மூடபடும். காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதி அளிப்படுகிறது.

Categories

Tech |