Categories
தேசிய செய்திகள்

மேளதாளங்களுடன்!…. 5 வயது மகள்…. விழா போல் கொண்டாடிய டீக்கடைக்காரர்…. எதற்காக தெரியுமா?….!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் முராரி குஷ்வாஹா தம்பதியினர். இவர் ஒரு டீக்கடைக்காரர். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளது. இவருடைய மனைவி உட்பட யாரிடமும் செல்போன் கிடையாது. இந்த நிலையில் தனக்கு செல்போன் வேண்டுமென்று முராரி-யின் 5 வயது மகள் வெகுநாட்களாக தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் நிதி நிலைமையை கருதி செல்போன் வாங்காமலேயே முராரி காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தன் மகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று 12,500 ரூபாய் மதிப்புள்ள ஒரு செல்போன் வாங்கியுள்ளார். தன் மகளின் ஆசையை நிறைவேற்றிய முகாரி அதை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்காக முராரி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அதில் தனது மகள் உள்பட 3 குழந்தைகளையும் அமர வைத்தார். அந்த குதிரை வண்டி முன்னே மேளதாளங்கள் இசைக்க இசைக் கலைஞர்களை அழைத்து வந்தார். இசைக்கலைஞர்கள் இசைக்க, குதிரை வண்டியில் தனது குழந்தைகளை அமர வைத்து புதிதாக வாங்கிய செல்போனை தனது மகளின் கையில் கொடுத்து செல்போன் வாங்கிய கடையில் இருந்து தனது வீடு வரை அழைத்து வந்தார். தனது குடும்பத்திற்கு முதல்முறையாக செல்போன் வாங்கியதையும், தனது மகளின் ஆசையை நிறைவேற்றியதையும் கொண்டாடும் வகையிலேயே, இந்த வித்யாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக முராரி கூறியுள்ளார். இந்த கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Categories

Tech |